கடந்தபடியிருக்கிறாள்
இந்த தூரத்தை
அவள் நம்பிய கடவுள்களுக்கு வேறு பணிகள் இருக்கின்றன
ஊசி முனை தவங்கள்
பொய்த்த போதும்
வரங்களில் வேண்டிக்கொள்கிறாள்
தன் இனத்திற்கும்
காப்பாற்றியபடியிருக்கும் யாவற்றிற்குமாக
வறண்ட தேசத்திற்கு
முடி சூடியவனுக்காக
துவங்குகிறாள்
மறுபடியும்
ஒற்றைக் கால் தவத்துடன்
தன நீள் பயணத்தை
இந்த தூரத்தை
அவள் நம்பிய கடவுள்களுக்கு வேறு பணிகள் இருக்கின்றன
ஊசி முனை தவங்கள்
பொய்த்த போதும்
வரங்களில் வேண்டிக்கொள்கிறாள்
தன் இனத்திற்கும்
காப்பாற்றியபடியிருக்கும் யாவற்றிற்குமாக
வறண்ட தேசத்திற்கு
முடி சூடியவனுக்காக
துவங்குகிறாள்
மறுபடியும்
ஒற்றைக் கால் தவத்துடன்
தன நீள் பயணத்தை
🌹🌹
வைராக்கியம் பொதிந்த
தன் பேழையை
பரம்பரை மூதாதையிடம்
கையளித்துவிட்டு
ஏதும் உறுத்தலில்லாதது போல்
கை கோர்க்கிறாள்
முன்னால் நகரும்
தன் முகவரி ஒன்றோடு
தன் பேழையை
பரம்பரை மூதாதையிடம்
கையளித்துவிட்டு
ஏதும் உறுத்தலில்லாதது போல்
கை கோர்க்கிறாள்
முன்னால் நகரும்
தன் முகவரி ஒன்றோடு
-அம்சப்ரியா
வணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.
ReplyDelete